உலகம்

ராஜபக்ச குடும்பத்திற்குள் நடந்த முக்கிய சந்திப்பு

Published

on

ராஜபக்ச குடும்பத்திற்குள் நடந்த முக்கிய சந்திப்பு

ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் மெதமுலன வீட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version