உலகம்

புறக்கணிக்கப்படும் வட மாகாண வைத்தியசாலைகள்: தீர்வை பெற்றுத்தருவதாக திலீபன் எம்.பி உறுதி

Published

on

புறக்கணிக்கப்படும் வட மாகாண வைத்தியசாலைகள்: தீர்வை பெற்றுத்தருவதாக திலீபன் எம்.பி உறுதி

வட மாகாணத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்வை பெற்றுத்தருவதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (03.11.2023) விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர், வைத்தியர் யோகேஷ்வரனுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு :தீவிர பாதுகாப்பில் வைத்தியசாலை

அவர் மேலும் கூறுகையில்,
“வடமாகாணத்தின் வைத்தியசாலைகளில் கட்டிட, ஆளணித்துவ மற்றும் சிகிச்சை உபகரணங்கள் ரீதியாக மன்னார் பொது வைத்தியசாலையே மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்த போதிலும் வைத்தியர்களால் மக்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றது.

எனினும், நிலவிவரும் குறைபாடுகளுக்கான தீர்வுகளை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் என்னால் பெற்றுத் தர முடியும் என நான் நம்புகின்றேன்.

மேலும் வைத்தியசாலையின் தேவைகளை, நடைபெற இருக்கும் வரவு செலவுத்திட்ட கூட்டங்களின் போது முன்வைத்து, அவற்றை நிறைவேற்றுவேன்” என தெரிவித்திருந்தார்.

Exit mobile version