இலங்கை

நோர்வே நாட்டில் ஈழத்து பெண் விமானியாக சாதனை!

Published

on

நோர்வே நாட்டில் ஈழத்து பெண் விமானியாக சாதனை!

யாழ். குருநகரில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வே சென்ற ஈழத்துப் பெண்ணான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை அந் நாட்டின் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்ளுக்கு முன் தனது விமான கல்வியை ஆரம்பித்து தனது ஆரம்ப பயிற்சியை Taxas அமெரிக்காவில் நிறைவு செய்து பின் மீண்டும் நோர்வேயில் கல்வியை தொடர்ந்து விமானத்தை ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து விமானியாக பட்டம் பெற்றுள்ளார்.

இவர் விமானத்தை பழுதுபார்க்கும் படிப்பை நோர்வேயில் நிறைவுசெய்து 12 ஆண்டுகள் விமானங்களை பழுதுபார்பவராக பணிபுரிந்துள்ளார்.

தனது தந்தையின் 50 வருட கனவிற்காக பல கஷ்டங்கள்,சிரமங்கள், தடைகளையும் தாண்டி சாதித்து காட்டியுள்ளார்.

Exit mobile version