உலகம்

இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு

Published

on

இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு

காசா பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று காலை இஸ்ரேலை நோக்கி பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

ஒரு சில ஊடகங்கள் 5000 ஏவுகணைகள் வரை பாய்ந்ததாகக் கூறுகின்றன.

ஆனால் ஏவுகணைகளின் எண்ணிக்கையை இஸ்ரேல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.

ஆனால் எதிர்பாராத திடீர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்க இஸ்ரேல் அரசு போர் நிலை சூழல் உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

Exit mobile version