உலகம்

சிறுபிள்ளைத்தனமாக உள்ளது… கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து

Published

on

சிறுபிள்ளைத்தனமாக உள்ளது… கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து

கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டினாலும், இதுவரை அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். தீவிரப் போக்கு கொண்டவர்கள் வெறும் இரண்டு சதவிகிதத்தினர்தான் கனடாவில் இருக்கிறார்கள். மற்ற சீக்கியர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்கிறார் கனடாவில் வாழும் இந்தியரான Amandeep Singh Chabba.

கனேடிய பிரதமர் உறுதியான ஆதாரங்களை அளித்திருக்கவேண்டும். அவருடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் இந்தியா கனடா உறவுகளில் பிரிவும் பிளவும் ஏற்பட்டுள்ளன என்கிறார் அவர்.

கனடாவில் வாழும் மற்றொரு இந்தியரான Dr Raj Jagpal என்பவர், கனடா அரசு கனடாவில் வாழும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்குகிறது. இது மிகவும் தவறு. ட்ரூடோ ஒன்றில் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் அல்லது ராஜினாமா செய்யவேண்டும்.தேர்தலில் வாக்குகள் கிடைப்படதற்காக அரசு பிரிவினையை உண்டாக்குகிறது என்கிறார்.

கனடாவில் வாழும் பல சீக்கியர்கள் இதேபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version