உலகம்

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐபோன்-15’ -யை வாங்கிய இளைஞர்

Published

on

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐபோன்-15’ -யை வாங்கிய இளைஞர்

அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 17 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐ போன்-15’ -யை வாங்கியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில் ஐபோன்-15 என்ற மாடல் இந்தியாவில் நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனை நிலையங்களில் கூட்டம் களைகட்ட தொடங்கியது.

இதில், வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினத்தில் இருந்தே ஐபோனை வாங்குவதற்காக குவியத் தொடங்கினர்.

அந்தவகையில், மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஐபோன் விற்பனை நிலையத்தில் கூட்டம் அதிகமாகி, வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐபோனை வாங்கிய முதல் நபர்
அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பையில் உள்ள ஐபோன் விற்பனை நிலையத்தில் 17 மணிநேரம் வரிசையில் நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஜபோன்-15 -யை வாங்கியுள்ளார்.

இது குறித்து அந்த இளைஞர் கூறும்போது, “இந்த போனை வாங்குவதற்காக நேற்று மாலை 3 மணி முதல் இருக்கிறேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில் வாங்குவதற்காக 17 மணிநேரம் வரிசையில் நின்று, முதல் நாளிலே வாங்கியதில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Exit mobile version