உலகம்

தமிழ் நாட்டில் மட்டுமே இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் செய்ததா மார்க் ஆண்டனி

Published

on

தமிழ் நாட்டில் மட்டுமே இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் செய்ததா மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி படத்திற்கு உலகளவில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முதன் முதலில் இணைந்து நடித்து வெளிவந்த இப்படம் முதலில் நாளில் இருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

அதே போல் தமிழகத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விட வசூலில் மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது.

ஆம், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 16.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இது விஷால் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூல் என கூறுகின்றனர். இனி வரும் நாட்களிலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழகத்தில் புதிய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version