உலகம்
ஜேர்மனியில் பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்க பொதுமக்கள் செய்த செயல்
![ஜேர்மனியில் பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்க பொதுமக்கள் செய்த செயல் 1 maxresdefault 2 scaled](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2023/09/maxresdefault-2-scaled.jpg?lossy=2&strip=1&webp=1)
ஜேர்மனியில் பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்க பொதுமக்கள் செய்த செயல்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், பேருந்து ஒன்றில் ஏறச்சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
உடனடியாக அங்கு ஓடோடி வந்த பொதுமக்கள் சுமார் 40 பேர், பேருந்தை தூக்கி, பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அந்த இளைஞரைக் காப்பாற்ற முயற்சி எடுத்த பொதுமக்களை ஹீரோக்கள் என்று கூறி பாராட்டியுள்ளார்கள் ஜேர்மன் பொலிசார்.