1 scaled
உலகம்செய்திகள்

நாசாவின் புதிய ஆய்விற்கு தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி

Share

நாசாவின் புதிய ஆய்விற்கு தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி

நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய திட்டமான சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிகளுக்கு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திட்டத்தின் தலைவராக பொறியியலாளரான ஷாக்ட்ரியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் செவ்வாயில் மனிதர்கள் கால்பதிக்க உதவும் குறித்த திட்டத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷாக்ட்ரியா மென்பொருள் பொறியியலாளராகவும், ‘ரோபாட்டிக்’ பொறியியலாளராகவும் பணியாற்றி பின்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கான விண்கலங்களை இயக்குபவராகவும் பணியாற்றியுள்ளார் என
நாசா விண்வெளி ஆய்வு மையமானது இதுவரை காலமும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டுவந்துள்ளது.

அடுத்த கட்டமாக மனிதர்கள் நிலவில் நீண்ட காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தையும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செயற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

குறித்த திட்டமானது நிலவில் துணிச்சலாக பல ஆய்வுகளை மேற்கொள்ளவும், செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாக மனிதர்களை கால்பதிக்க உதவும் எனக் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...