உலகம்

 ‘செல்லம்’னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார்

Published

on

 ‘செல்லம்’னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார்

கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசிய ‘செல்லம்’ என்ற வசனத்தை முதன் முதலில் தாம் பயன்படுத்தியதாகவும், அது பரவி தான் கில்லியில் வந்துள்ளது என்றும் நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.

தமிழக மாவட்டம் கோவையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான்,”நான் இரவில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ‘சொல்லு செல்லக்குட்டி’ என பேசினேன். என் மாமியார் வெளியில் தரையில் படுத்திருந்தார். அதை அவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.

பின், என் மாமியார் என் மனைவியிடம் இதை பற்றி கூறினார். அதற்கு என் மனைவி, அண்ணன் வடிவேலு கூட பேசியிருப்பார் எனக் கூறியுள்ளார். அதற்கு என் மாமியார், அப்படியா இருவரும் பேசுவார்கள் எனக் கேட்டுள்ளார்” என்றார்.

மேலும் பேசிய சீமான், “முதன் முதலில் ‘செல்லம்’ என்ற வார்த்தையை சினிமாவில் நான் தான் பயன்படுத்தினேன். பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவை இயக்கும் போது, ‘செல்லம் இங்க வா போ’ என்று தான் பேசுவோம். அது, இப்போது பரவிவிட்டது.

அப்படி தான் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசும்போது வைத்து விட்டார்கள். அது நான் போட்ட பிட்டு தான். ‘செல்லம்ம்’ -ன்னு பிரகாஷ் ராஜ் பேசுவாரே, அது தான்” எனக் கூறினார்.

Exit mobile version