உலகம்

சுவர் மீது மோதி நொறுங்கிய கார்: சிறுவன் உள்பட 3 பேருக்கு நேர்ந்த சோகம்

Published

on

சுவர் மீது மோதி நொறுங்கிய கார்: சிறுவன் உள்பட 3 பேருக்கு நேர்ந்த சோகம்

அயர்லாந்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து கோ டிப்பரரியில் உள்ள கேஷலில் கார் ஒன்று சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் காரின் முன் இருக்கையில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் பின் இருக்கையில் இருந்த சிறுவன் உள்பட 3 பேர் விபத்தில் சிக்கினர்.

அவசர சேவைகள் விபத்து ஏற்பட்ட வின்டுமில் நாக்புல்லோஜ் பகுதி சாலையில் கூடியிருந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு அடைத்து வைக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த ஆண் பெண் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் பின் இருக்கையில் இருந்த சிறுவன் உடல் குளோன்மெலில் உள்ள டிப்பரரி பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குளோன்மெலில்  4 இளைஞர்கள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version