உலகம்
வெடித்துச் சிதறும் எரிமலை: அருகே செல்லும் சுற்றுலாப்பயணிகள்
வெடித்துச் சிதறும் எரிமலை: அருகே செல்லும் சுற்றுலாப்பயணிகள்
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி எரிமலைக் குழம்பைக் கொப்புளித்துக்கொண்டிருக்கிறது.
எரிமலைகளுக்கும், சுடுதண்ணீர் ஊற்றுகளுக்கும் பெயர் பெற்ற நாடு ஐஸ்லாந்து. ஆகவே, அங்கு சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் குவிகின்றனர்.
Reykjanes தீபகற்பத்தில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கும் நிலையில், அதைக் காண மக்கள் அந்த பகுதியில் கூடுகின்றனர்.
எரிமலைக் குழம்பு நச்சு வாயுக்களை வெளியிடக்கூடியதாகும். நச்சு வாயுக்களால் ஏற்படும் அபாயத்தை அறியாமல் மக்கள் எரிமலை வெடிக்கும் காட்சியைக் காண அதன் அருகே செல்கிறார்கள். ஆகவே, நிபுணர்கள் அது குறித்து மக்களை எச்சரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், எரிமலை வெடிப்பைக் காட்டும் காட்சிகள் பல வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்திவருகின்றன.
You must be logged in to post a comment Login