கென்யா
உலகம்செய்திகள்

கென்யாவில் பயங்கரமான லொறி விபத்தில் 48 பேர் பலி

Share

மேற்கு கென்யா இல் நேற்றிரவு நடந்த லொறி விபத்தில் 48 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

வேகமாக வந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை மீட்பு நடவடிக்கைகளை கடினமாக்கியது, கென்ய செஞ்சிலுவைச் சங்கம், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்களை அனுப்பியது.

கெரிச்சோவிற்கும் நகுருவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கெரிச்சோவை நோக்கிச் சென்ற டிரக் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லொறி வேகமாக வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் பொலிஸ் கமாண்டர் ஜெஃப்ரி மாயக் உறுதிப்படுத்தினார். “இதுவரை, 48 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் ஒன்று அல்லது இரண்டு பேர் இன்னும் டிரக்கின் அடியில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

கென்யா நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு பல ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். தேசிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு சாலை விபத்துக்களில் 21,760 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் ட்வீட் செய்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...