உலகம்
அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை தாக்கியழித்த ரஷ்ய ஏவுகணைகள்!
அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை தாக்கியழித்த ரஷ்ய ஏவுகணைகள்!
அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஏவுகணைகள் உட்பட ரேடார் நிலையங்களை, ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு ரஷ்யா பல்வேறு ஆயுத உதவிகளை செய்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகள் மற்றும் பல ராணுவ ஆயுதங்களை வழங்கியிருந்தது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ரஷ்யாவின் ஏவுகணைகளை, ரேடார் மூலம் துல்லியமாக கண்டறிந்து உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
#world
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.