உலகம்
கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
இஸ்ரேலில் கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மற்றும் ஆறு வயதுடைய சகோதரர்கள், கஞ்சா பிஸ்கட்களை சாப்பிட்டுவிட்டு, ராமத் கானின் டெல் ஹாஷோமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் தவறுதலாக அந்த பிஸ்கட்களை சாப்பிட்டு, மயக்கமடைந்து சுருண்டு விழுந்ததாக குழந்தைகளின் தாய கூறினார். மூத்த மகன் ஒரு முழு பிஸ்கட்டையும் சாப்பிட்டதாகவும், 2 வயது குழந்தை பாதி சாப்பிட்டபோதே மயங்கியதாக அவர் கூறினார்.
தற்போது ஆறு வயது குழந்தை மிதமான நிலையில் இருப்பதாகவும், இரண்டு வயது குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய உண்ணக்கூடியவை மற்ற மருந்துகள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் என குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்று குழந்தை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
You must be logged in to post a comment Login