உலகம்
பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் உயிருடன் புதைந்த பரிதாபம் !
பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் உயிருடன் புதைந்த பரிதாபம் !
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் மணல் மேட்டில் பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் ஒருவர் உயிருடன் புதைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள கடற்கரை மணல் மேட்டில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வர்ஜீனியாவை சேர்ந்த 17 வயது பெயர் குறிப்பிடப்படாத இளைஞரே, பள்ளத்தில் உயிருடன் புதைந்து மரணமடைந்தவர்.
மே 7ம் திகதி மதியம் சுமார் 2 மணியளவில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து இளைஞரை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, மீட்பு வீரர்கள் தரப்பு தீவிரமாக களமிறங்கினர்.
இந்த நிலையில், பள்ளத்தில் மிக ஆழத்தில் அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. மேலும், குறித்த இளைஞருக்கு உயிர் காக்கும் முதலுதவிகள் மேற்கொண்ட பிறகும் காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவித்துள்ளனர்.
இளைஞர் புதைந்து போன பள்ளமானது வெளியே தெரியாத வகையில் இருந்துள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடற்கரையில் ஆழமான பள்ளங்கள் எதுவும் மக்கள் தோண்ட வேண்டாம் எனவும், ஆபத்தில் முடியலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login