இந்தியா
காதலன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பதிவிட்டதால் தற்கொலை!
காதலன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பதிவிட்டதால் தற்கொலை!
இந்தியாவில் காதலன் தன்னுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் 22 வயதான ஆதிரா.
இவர் அதே பகுதியை சேர்ந்த அருண் வித்யாதர் என்பவரை காதலித்தார்.
2 ஆண்டுகளாக காதலித்த இவர்கள் பல இடங்களுக்கு சென்று நெருக்கமாக சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
அண்மையில் இருவரும் பிரிந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அருண் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆதிரா மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இதையடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆதிராவின் பெற்றோர் கொடுத்த புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
You must be logged in to post a comment Login