உலகம்
உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனை உலகத்தில் இருந்து அழிப்பதற்கு ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
கீவ் தவிர மேலும் பல நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
You must be logged in to post a comment Login