உலகம்
வெடித்து சிதறிய உக்ரைன் சரக்கு விமானம்! – 8 பேர் பலி
உக்ரைனைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் அன்டனோவ் சரக்கு விமானம் செர்பியாவில் இருந்து ஜோர்டான் நோக்கி புறப்பட்டு ச் சென்ற நிலையில், விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியுள்ளது.
செர்பியாவில் இருந்து ஜோர்டான் நோக்கி புறப்பட்டு ச் சென்ற குறித்த விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அருகிலுள்ள கவலா விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் விமான நிலையத்திற்கு 40 கி.மீட்டருக்கு முன்பே அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக செர்பிய அரசு தெரிவித்துள்ளது.
சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய விமானம் நீண்ட நேரம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
You must be logged in to post a comment Login