உலகம்
கொரோனாவால் உயிரிழந்த மனைவியின் நினைவாக கோயில் கட்டி வழிபடும் கணவன் !
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் ஷாஜபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த தனது மனைவியின் நினைவாக கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்.
ஷாஜபூரில் இருந்து 3 கிலோ மீற்றர்தூரத்திலுள்ள சம்ப்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். இவருடைய மனைவியின் பெயர் கீதாபாய் .
கொரோனாவால் உயிரிழந்த தனது மனைவி கீதாபாயின் நினைவாக ஒருகோயிலைக்கக்கட்டியுள்ளார்.
தனது மனைவியின் பிரிவினை ஏற்கமுடியாத நாராயணசிங், அவரது உருவிலான சிலையினை நிறுவி நாள்தோறும் வழிபட்டு வருகிறார்.
மனைவியின் பிரிவை ஏற்க முடியாத நாராயண் சிங், அவரது உருவிலான சிலை நிறுவி நாள்தோறும் வழிபட்டு வருகிறார்.
கோயிலில் கீதாபாய் சிலையை அமைப்பதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் அனைத்து சடங்குகளையும் செய்ததுடன், அவர்கள் தினமும் சிலையை வணங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login