உலகம்
செவ்வாயில் நிலநடுக்கம்! – நாசா கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
நாசா அனுப்பியுள்ள இன்சைட் லேண்டர் இதனை பதிவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
4.2 ரிக்டர் அளவு கொண்ட அரை மணி நேர கொண்ட ஒரு நீண்ட நிலநடுக்கம் செவ்வாய்க் கிரகத்தில் ஏற்பட்டுள்ளது.
இது கடந்த ஒரு மாதத்தில் ஏற்படுகின்ற மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கம் முந்தைய பதிவுகளை விட ஐந்து மடங்கு வலிமையானது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
நீண்ட தூரத்திலிருந்து ஒரு பெரிய அதிர்வைக் கண்டறிந்தது இதுவே முதல் முறையாகும் எனவும் நாசா விஞ்ஞானிகள் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login