17 6
உலகம்செய்திகள்

காசாவில் உதவிக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு: இஸ்ரேலிய வீரர்கள் சொன்ன வாக்குமூலம்

Share

காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்த பாலஸ்தீனிய பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இஸ்ரேலிய வீரர்களுக்கு வெளிப்படையாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய நாளிதழான ‘ஹாரெட்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, உணவுக்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும்படி தங்கள் தளபதிகள் உத்தரவிட்டதாக இஸ்ரேலிய வீரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

‘காசா மனிதாபிமான அறக்கட்டளை’ (GHF) என்ற அமெரிக்க அமைப்பு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த அமைப்பின் மூலம் உதவிகளைப் பெறுவதற்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாகப் புகார்கள் எழுந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஹாரெட்ஸ்’ செய்தி நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது.

அந்த ஊடகத்திற்கு பேட்டியளித்த இஸ்ரேலிய வீரர்கள், “நாங்கள் டாங்கிகளிலிருந்து இயந்திர துப்பாக்கிகளால் சுட்டோம், கையெறி குண்டுகளை வீசினோம்.

பாலஸ்தீனியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட எங்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது. உதவி தேடி வந்தவர்களில் பலர் முதியவர்கள், பெண்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளை தேடி வந்த குழந்தைகளும் இருந்தனர்” என்று கூறியுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...