ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி
உலகம்செய்திகள்

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

Share

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற ஆறு பேர் சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்துள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, 47 வயது ஜேர்மானிய உக்ரைனியர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் இரண்டாவது உயரமான சிகரமான, 14,867 அடி உயரமுடைய Weisshornஇல் ஏறும் முயற்சியின்போது, 1900 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை, சுவிட்சர்லாந்தின் Bernஐச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் Stockhorn மலையிலிருந்து இறங்கும்போது, வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும், 26 வயது பிரான்ஸ் நாட்டவர் ஒருவரும், 36 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவரும் 3,450 மீற்றர் உயரமுடைய Aiguille du Tour என்னும் மலையில் ஏறும்போது பனிப்பாறைச் சரிவில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் இருவரும் திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டதாகவும், காயமடைந்த 22 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, சூரிச்சைச் சேர்ந்த 37 வயது ஆண் ஒருவரும், 33 வயது பெண் ஒருவரும் Lagginhorn என்னும் மலையில் 13,000 அடி உயரத்தை எட்டிய நிலையில், 200 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்கள்.

சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற ஆல்ப்ஸ் மலையில், சில நாட்களில் ஆறு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...