வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

25 6915d20fc755f

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒன்றாக குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்து விட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த காலங்களில் அரசியல் தலைமைகளிடம் வாக்குமூலம் பெற விசாரணை அதிகாரிகள் அவர்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனினும் தற்போது, சக மனிதர்கள் செல்லும் அதே வாசல் வழியாக அரசியல் தலைமைகளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று வருகின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே,” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“எங்களுடைய அரசாங்கத்தை வீழ்த்துவதாகக் கதை பேசி வருகின்றனர். அது நடக்காது. இந்த அரசாங்கம் மேலும் உறுதியாகக் கட்டியெழுப்பப்படும். கட்சி பேதங்களின்றி அரசாங்கம் தனது பணியை நிறைவேற்றும்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version