செய்திகள்

ரசிகர்களுக்கு தோனியின் ஆச்சரியப்பட வைக்கும் அறிவிப்பு

Published

on

ரசிகர்களுக்கு தோனியின் ஆச்சரியப்பட வைக்கும் அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்தலைவர் பொறுப்பிலிருந்து விலகி வெறும் விக்கெட்காப்பாளர் துடுப்பாட்ட வீரர் அல்லது இம்பேக்ட் வீரராக மட்டும் இருக்கக்கூடிய ஒரு அறிவிப்பை தோனி ஆச்சரியப்படும் வகையில் வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மகேந்திர சிங் தோனி, நடக்கவிருக்கும் 2024 ஐபிஎல் தொடரில் புதிய ரோலில் களமிறங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், “புதிய ஐபிஎல் சீசனில் புதிய ரோலில் செல்வதற்காக காத்திருக்க முடியவில்லை. அப்டேட்டுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

புதிய ரோலில் தோனி களமிறங்கினால் நிச்சயம் இம்பேக்ட் பிளேயராக விளையாடும் வாய்ப்பு இருக்கிறது, தோனிக்கு பதிலாக சமீர் ரிஸ்வி அல்லது ஆரவல்லி அவிநாஷ் இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பிருக்கிறது.

அணித்தலைவரை பொறுத்தவரையில் மீண்டும் ஜடேஜாவிடமோ அல்லது ருதுராஜ் கெய்க்வாட் இடமோ செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. தோனி என்ன செய்யப்போகிறார் என்று விரைவில் தெரிந்துகொள்ளலாம்.

 

Exit mobile version