இலங்கை
மேலும் சில இலங்கை வீரர்கள் தலைமறைவு!
இங்கிலாந்தில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஜூடோ, குத்துச்சண்டை, கடற்கரை கைப்பந்து மற்றும் மல்யுத்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அதிகாரி உட்பட பத்து இலங்கை தடகள வீரர்கள் காணாமல் போயுள்ளதாக இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பர்மிங்காம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை அணியில் 161 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கத்தால் நிலையான 180 நாள் விசாக்கள் வழங்கப்பட்டன.
தற்போது கடவுச்சீட்டு மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் பாதுகாப்புக்காக அந்தந்த விளையாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment Login