13 30
இந்தியாசெய்திகள்

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜயின் மனதை பாதித்த சிறுவன் ராகுல் யார்?

Share

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜயின் மனதை பாதித்த சிறுவன் ராகுல் யார்?

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் சந்தித்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ராகுல் என்ற சிறுவனை பற்றி பேசியுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திப்பதற்கு அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய் பேசுகையில், “உங்களுடைய போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு நான் இங்கு வந்துள்ளேன்.

கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் பேசியதை கேட்டவுடன் ஏதோ செய்தது. இந்த விடயத்தில் என்னுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு.

நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்” என்றார்.

இதில், விஜய் குறிப்பிட்ட ராகுல் என்ற சிறுவன் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.

அந்த சிறுவன் அளித்த பேட்டியில், “எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலம், ஏரிகள், பள்ளிகள் மட்டுமே போதும். விமான நிலையம் வந்தால் நாங்கள் என்ன மேலேயே பறக்க போகிறோம்.

விமான நிலையம் வந்தால் பள்ளி பாதிக்கப்படுகிறது. அவங்க பசங்க மட்டும் படிக்கனுன்னு நினைக்கிறாங்க. நாங்கள் படிக்க வேண்டாமா? ஏரி இருந்தால் தான் வெயில் காலத்தில் நாங்க இங்க வந்து குளிப்போம்” என்று பேசினார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...