Sivajilingam
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு பிள்ளையையும் கிள்ளிவிடுகிறார் சுமந்திரன்!!

Share

தமிழரசுக் கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளது. இந்தியாவுக்கு ஒருமுகம், தென்னிலங்கைக்கு ஒருமுகம், சர்வதேசத்திற்கு ஒரு முகம், தமிழ் மக்களுக்கு ஒருமுகத்தை காட்டுவதற்கு தமிழரசுக்கட்சி முயற்சி செய்துகொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாடுகளை கூட நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலை நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன்.

அதனையும் மீறி நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகரசபை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.

அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனை தடுக்க முற்படுவோம்.

சிலர் கூறுவார்கள் பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதைப்போல என்று, ஆனால் இங்கு சுமந்திரனின் நடவடிக்கையானது தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவது போன்ற செயற்பாடாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...