16 32
இலங்கைசெய்திகள்

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Share

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை (Srilanka) அணிக்கும் நியூசிலாந்து (New Zealand) அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் மார்க் சேப்மன் (Mark Chapman) அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும் Tim Robinson மற்றும் Mitchell Hay ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து அசரங்க (Wanindu Hasaranga) 02 விக்கெட்டுக்களையும், நுவன் துஷார (Nuwan Thushara), மதீஷா பத்திரன (Matheesha Pathirana) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது ஒருநாள் மற்றும் ரி20 விளையாடுதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பன நடைபெறவுள்ளன.

அதன் படி முதல் தொடராக ரி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு மவுங்கானுவில் அமைந்துள்ள பேய் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் என்ற முனைப்புடன் களமிறங்கவுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

9867DD57 36F5 4D0B B0C9 6373354B6CAA
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழு: பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) இரத்து செய்வது தொடர்பான பரிந்துரைகள்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...