15 28
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

Share

பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் சகல மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள தேர்தல் உதவி ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் மற்றும் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது எதிர்வரும் சனிக்கிழமை (28) தேர்தல் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கிடைத்த அனுபவம், பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும் அடுத்த பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்வதற்கான ஒழுங்கு விதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் குறித்து அன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...