கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

1765079066 25 693273715360b md

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (National Transport Commission – NTC) அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் தமது புகையிரதப் பருவ டிக்கெட்டுகளைப் (Season Tickets) பயன்படுத்தி இந்தக் காலப்பகுதியில் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புப் பேருந்துச் சேவை குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version