tamilni 319 scaled
இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்!

Share

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்!

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் உள்ளடங்களாக மூன்று வேட்பாளர்கள் போட்டியிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் இங் கொக் சாங், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதுடன் அன்றையதினம் அந்நாட்டு பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்குபற்றும் தமிழர் ஒருவர் உட்பட மூவரும் நேற்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதன்போது வேட்ப்பாளர்களுக்கு மக்களிடம் உரையாட இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அங்கு கருத்து தெரிவித்த தர்மன் சண்முகரட்ணம்,கண்ணியமான போட்டி, நியாயமான பிரச்சாரம் என்பவற்றுடன் முழு மனதுடன் சிங்கப்பூர் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நமது எதிர்காலம் மேலும் கடினமானதாகவும் சவாலானதாகவும் இருக்கப்போகிறது. அதனால் பல ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவங்களையும் திறன்களையும் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற இந்த போட்டியில் களமிறங்கியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...