10 32
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு

Share

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு

மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட உள்ளது.

குறித்த விடயம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission of Sri Lanka (PUCSL) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்கு தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டண நடைமுறையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது.

இந்த யோசனை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்புகளை முன்னெடுக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்தக் கருத்துக் கணிப்புகள் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இதன்போது மின் கட்டணத்தை 20 – 30 சதவீதத்தால் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை

இந்த கருத்துக் கணிப்பில், மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை மற்றும் அதுதொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஊழியர்களினால் மேற்கொள்ளப் பட்ட மதிப்பாய்வின் பின்னர் தயாரிக்கப்பட்ட யோசனை வரைவு தொடர்பில் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கமைய, மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை மறுதினம் அறிவிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...