அரசியல்
பின்வாங்கிய சுகாதார தொழிற்சங்கங்கள்!!
சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படுவதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளைக் காலை 8 மணி முதல் 14 நாட்களுக்கு சுகாதார தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுகாதார சேவையினை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராக 18 தொழிற்சங்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login