அரசியல்
நாட்டில் பொருளாதார நெருக்கடி கடனாலேயே ஏற்பட்டது – உண்மையை சொன்ன கம்மன்பில!!
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதல்ல கடனாலேயே ஏற்பட்டது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் ,
நீண்ட காலமாக காணப்பட்ட இந்த பொருளாதார பிரச்சினை எதிர்வரும் 5 ஆண்டுகளில் பாரியளவில் வெளிப்படவிருந்தது. எனினும், கொவிட்-19 தொற்று காரணமாக முன்னதாகவே வெளிப்பட்டு விட்டது.
இந்த பிரச்சினையை இந்தியா, சீனா, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து குறுகிய காலத்திற்கு கடன் பெறுவதால் தீர்க்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும்தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login