இலங்கைசெய்திகள்

பதவி நீக்கப்பட்ட நிஹால் தல்துவ – காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்

Share

பதவி நீக்கப்பட்ட நிஹால் தல்துவ – காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Thalduwa) பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, புதிய காவல்துறை ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளராக கே.பி.மனதுங்க ( K.P.Manatunga) நியமிக்கப்பட்டுள்ளார்.

மனதுங்க இதற்கு முன்னர் கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றியிருந்தார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய காலத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தனக்குத் தெரியாது என பதிலளித்த பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கடுமையாக விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர்கள் உட்பட பல மூத்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் எம்.எம்.எஸ். தெஹிதெனிய நுகேகொட பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி பணிப்பாளராக முத்துமால நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...