tamilni 330 scaled
இலங்கைசெய்திகள்

நாமலை வழி நடத்தும் மர்ம சக்தி

Share

நாமலை வழி நடத்தும் மர்ம சக்தி

கடந்த செவ்வாய்க்கிழமை வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.

ஆனால், சபைக்குள் செல்லாமல், எதிர்க்கட்சி அறை, ஆளும் கட்சி அறைகளுக்கு சென்று உறுப்பினர்களுடன் சுமுகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம், சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் நம்பிக்கையுடன் உரையாடியமை சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் ஆளுங்கட்சியின் முன்னிலையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய வேளையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இருந்த குழுவினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நீங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறியதாகவும், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் அவரை விமர்சித்து வருவதாகவும் மகிந்தவிடம் தெரிவித்தார்.

யாரோ ஒருவரின் ஆலோசனையை பெற்று நாமல் இவ்வாறு செயற்படுவதாக மகிந்த, ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தையும் பிரச்சினையின்றி நிறைவேற்ற முடியும் என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...