MediaFile 9 1100x619 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிவாரண நிதி குளறுபடிக்கு அரச அதிகாரிகளே பொறுப்பு: யாழ் மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

Share

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு விநியோகத்தில், தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது தகுதியற்றவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டாலோ, அதற்கு அரச அதிகாரிகளே பொறுப்புகூற வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரம் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட (முற்றிலும் சேதமடைந்த, பகுதி சேதமடைந்த, அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட) அனைத்து வீடுகளுக்கும் இந்த ரூபா 25,000 உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், கிராம மட்ட அலுவலர்கள் நேரடியாகப் பிரிவுக்குச் சென்று தரவுகளைப் பெற்றுக்கொள்வதைப் பிரதேச செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

எனினும், இதில் குளறுபடிகள் ஏற்படின் அதற்குப் பிரதேச செயலாளர் உட்பட குறித்த பிரிவுக்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் ஆகியோர் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை இற்றைப்படுத்தி உறுதி செய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் , மாவட்ட செயலாளரின் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...