5 46
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பெண்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள அழகுசாதன பொருட்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

கொழும்பில் பெண்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள அழகுசாதன பொருட்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் போலியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கடை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

போலியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் அதன் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடையில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான 27 வகையான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை ஜாலியகொட பிரதேசத்தில் உள்ள கடையில் தமது பிரதிநிதித்துவ முகவர் நிலையத்தின் அனுமதிப் பத்திரத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதன பொருட்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அழகுக்கலை நிலையம் நடத்தும் நிறுவனத்தின் சட்டப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் பேரில் பெண் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளரைப் போன்று மாறுவேடமிட்டு 1350 ரூபாவை செலுத்தி முகத்திற்கு பயன்படுத்தும் திரவம் ஒன்று பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் அது போலியானதென தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...