அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது, அவற்றைத் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த நிவாரணக் கொடுப்பனவை ரூ. 10,000 இலிருந்து ரூ. 25,000 ஆக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய வழங்கப்படும் கொடுப்பனவு தற்போது ரூபா 25,000 ஆக இருக்கும். நிதி அமைச்சு இந்தக் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்பு, வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைச் சீரமைப்பதற்கும், சுகாதாரமான சூழலை மீள அமைப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

