அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

592732937 1280508897442061 4469225105931887604 n

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக, இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா (ரூ. 10,000,000) நன்கொடையை வழங்கியுள்ளனர்.

உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீனின் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினி இந்தக் காசோலையை வழங்கினார்.

இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்குப் போரா சமூகப் பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, அதற்காகத் தமது நன்றியையும் தெரிவித்தனர்.

Exit mobile version