16 16
இலங்கைசெய்திகள்

இணைய குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் நபர்கள்: இலட்சக்கணக்கில் பணமோசடி

Share

இணைய குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் நபர்கள்: இலட்சக்கணக்கில் பணமோசடி

இலங்கையில் இணைய நிதிமோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்படுகின்ற முதியவர்களுடன் போலியான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு இணையக்குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சீனா, இந்தியா, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் அவர்களது குற்றங்களுக்கு ஆதரவாக இலங்கையை சேர்ந்த பலரும் செயற்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையக்குற்றவாளிகள் முன்னரே தயாரிக்கப்பட்ட பல்வேறு மொழிகள், அழைப்பு உரையாடல்கள், குறுஞ்செய்தி பரிந்துரைகள் ஆகியவற்றை தொடர்புடைய மோசடிகளுக்கு பயன்படுத்துகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர மற்றும் முதியவர்களுடன் போலி உறவுகளை ஏற்படுத்தி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு வழிகளில் பணத்தை வைப்புச்செய்ய தூண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வரும் இணைய குற்றவாளிகள், கணக்கில் உள்ள பணத்தை இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் மூத்த விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...