tamilni 334 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை..!

Share

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை..!

நாடு கடந்த தமிழீழ அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட ”இலங்கை மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகளின் துயரம்” என தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசு அனுமதி மறுத்திருப்பதை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் ஈழத் தமிழர்களது இன விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாக சர்வதேச அரங்கில் முன் நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு வலுவான அமைப்பாக இன்றுவரை நாடு கடந்த தமிழக அரசாங்கமே செயற்படுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எவ்விதமான செயற்பாடுகளையும் ஈழத்தில் செய்ய விடாது இலங்கை அரசாங்கம் பாரிய தடைகளை விதித்திருக்கின்றது. இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்ளும் நாட்டிற்குள் வர முடியாதபடி தடை உத்தரவு போட்டிருக்கின்றது.

இதற்கான பிரதான காரணம் இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாக பல வழிகளிலும் சர்வதேச அரங்கில் பாரிய அழுத்தங்களை இன்று வரை பிரயோகிக்கின்ற ஓர் பலமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றமையே காரணமாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று இருக்கக்கூடிய தி.மு.க தலைமையிலான தமிழக அரசு ஈழத் தமிழர்கள் விவகாரங்களில் அன்று தொடக்கம் இன்று வரை எதிராகவே தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டு வருகின்றது.

இதற்கு சான்றாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தம் ஓர் உதாரணமாகும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தமிழகத்தில் தொடரும் தொடர வேண்டும் இதற்கு எதிராக தமிழகத்தில் எந்த கட்சிகள் தடை போட்டாலும் அத் தடைகளை அவர்கள் திருப்பி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் தடைகள் அனைத்தும் தமிழக தொப்புள் கொடி உறவுகளால் அனைத்து வழிகளாலும் எதிர்க்கப்படும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு மிக தெளிவாக வலியுறுத்துவதோடு மேலும் தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசின் தமிழர் விரோதச் செயல்களையும் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...