9
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருவர் நியமனம் : வெளியான அறிவிப்பு

Share

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருவர் நியமனம் : வெளியான அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதிக்கு நிதி மற்றும் பொருளாதார விடயங்களில் ஆலேசானை வழங்கி வழிநடத்துவதற்காக இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த குலங்கமுவவும் (Duminda Hulangamuwa), ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் அனில் பெர்ணாண்டோவும் (Anil Fernando) ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையில் கலந்தாலோசித்த பின்னர் ஜனாதிபதி தனக்கான பணியாளர்களை நியமிக்கலாம், அரசமைப்பில் இதற்கு இடமுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் அமைச்சரவை இந்த நியமனங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இரண்டு நியமனங்களும் செப்டம்பர் 24 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவை கௌரவ பதவிகள் எனவும் எந்த சம்பளமோ அல்லது வேறு நன்மைகளோ வழங்கப்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...