இலங்கை
லண்டனுக்கு பறந்தார் ரணில்

அல் ஜசீரா(al jazeera) ஊடக நிறுவனம் நடத்தும் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நேற்று(03) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக அவர் பின்பற்றிய கடுமையான பொருளாதாரத் திட்டம் இலங்கையை சரிவிலிருந்து காப்பாற்றியதா? அல்லது அது வரவிருக்கும் பெரிய துன்பத்திற்கு வழி வகுத்ததா?
ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களின் போது பிரதமராக தனது அனுபவங்கள் குறித்து அவர் தனது கருத்துக்களை வெளியிட உள்ளார்.