Connect with us

இலங்கை

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு

Published

on

2 3

அநுராதபுர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அநுராதபுரம் தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் காவல்துறை தலைமையக பிரதான பரிசோதகருக்கு குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (03) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் வழியாக கொழும்புக்கு காரில் பயணித்தபோது சாலியபுர கல்வல சந்தியில் அநுராதபுரம் பிரிவு போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அனுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்ததை அறிந்ததும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சட்டத்தரணி சுனந்த தென்னகோன் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி ஒரு பிரேரணையை முன்வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, வழக்கில் சந்தேகநபரின் பெயர் அர்ச்சுன லோச்சன என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டமையடுத்து, சரியான சந்தேகநபரை அடையாளங்கண்டு அறிவிக்குமாறு நீதிமன்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

பின்னர், மேலும் ஒரு அறிக்கையின் மூலம், அநுராதபுரம் காவல்துறை தலைமையகம் வழக்கில் சரியான சந்தேக நபரின் பெயரை இராமநாதன் அர்ச்சுனா என்று திருத்தி, நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவித்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சந்தேக நபராக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்16 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 03 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.02.2025 குரோதி வருடம் தை மாதம் 21, திங்கட் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த மகம், பூரம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 02 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.02.2025, குரோதி வருடம் தை மாதம் 20 ஞாயிற்று கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த ஆயில்யம்,...

tamilnaadi 10 tamilnaadi 10
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 01 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 01 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 01.02.2025, குரோதி வருடம் தை மாதம் 19, சனிக் கிழமை,...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 31 ஜனவரி 2025 – Daily Horoscope

Post Views: 23

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 30 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 30.01.2025, குரோதி வருடம் தை மாதம் 17, வியாழக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் மிருகசீரிடம், புனர்பூசம் சேர்ந்தவர்களுக்குச் சந்திராஷ்டமம்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 29 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 29.01.2025, குரோதி வருடம் தை மாதம் 16, புதன் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் மிருகசீரிடம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 28 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 28.01.2025, குரோதி வருடம் தை மாதம் 15, செவ்வாய்க் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு...