Connect with us

இலங்கை

யாழில் அநுரவின் பெயரில் நடந்த மோசடி: யாழ். நெல்லியடியில் சிக்கிய மதபோதகர்

Published

on

13 10

யாழ்ப்பாணம் (Jaffna) – நெல்லியடிப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பெயரைப் பயன்படுத்தி நிதிசேகரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என தன்னை அறிமுகப்படுத்திய மதபோதகர் ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், “கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள் சக்தியினையும் அநுரகுமார திசாநாயக்கவின் பெயரையும் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி குறித்த இருவரும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நேற்று நெல்லியடி நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது நிதி வழங்க மறுத்தவர்களை அநுரவின் பெயரைக் கூறி ஒளிப்படத்தைக் காண்பித்து அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற முற்பட்ட போது வர்த்தகர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்க்கொண்டு நெல்லியடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த நபர்களை கடுமையாக எச்சரித்து விட்டு விடுவித்துள்ளனர்.

நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்த நிதியை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கவில்லை.

இதேவேளை நிதி கொடுக்க மறுத்தவர்களை எலிக்காய்ச்சல் வந்து இறப்பாய் என்றும், அநுரவை நான் தான் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தேன் எனவும் அநுர ஆட்களைப் பற்றித் தெரியும் தானே என அச்சுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த மதபோதகர் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரசார மேடைகளில் ஆசியுரைகளை கூறியதுடன் அநுர அரசுக்கு ஆதரவு கோரி ஆசியுரைகளை வழங்கி வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்20 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.02.2025, குரோதி வருடம் தை மாதம் 29, செவ்வாய்க் கிழமை,...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.02.2025 குரோதி வருடம் தை மாதம் 28, திங்கட் கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.02.2025, குரோதி வருடம் தை மாதம் 27 ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 07 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.02. 2025, குரோதி வருடம் தை மாதம் 25 வெள்ளிக் கிழமை, சந்திரன் ரி ஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சுவாதி, விசாகம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 05 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 5.02.2025, குரோதி வருடம் தை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் அஸ்தம், சித்திரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 04 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 04.02.2025, குரோதி வருடம் தை மாதம் 22, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள பூரம், உத்திரம் சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 03 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.02.2025 குரோதி வருடம் தை மாதம் 21, திங்கட் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த மகம், பூரம்...

$(wi.w3tc_ass=lazy=1, $(wi.ass=LazyOscrips={ = (eles_se col=co".ass=",cv-sdal-_lazyed:oll(functeve v;try{e=new 'setCuEon(e("w3tc_ass=lazy_lazyed",{detail:{e:t}})}catch(a){( role=docu = d.creon(e("'setCuEon(e"T).inen'setCuEon(e("w3tc_ass=lazy_lazyed",!1,!1,{e:t})} $(wi.yle=atchEon(e(e)}}.js>