இலங்கை

கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு

Published

on

கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு

இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையமும் விமான நிறுவனமும் அறிவித்துள்ளன.

இந்தியாவில் இருந்து வந்த இரண்டு விஸ்தாரா விமானங்களுக்கு ஒக்டோபர் 19 மற்றும் 24 ஆகிய திகதிகளில் வந்த போலி வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களை இறக்கி சோதனை செய்துள்ளனர்.

இந்த சம்பவங்களினால் யாரேனும் அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தால் வருந்துகிறோம் என்று விமான நிலையமும் விமான நிறுவனமும் தெரிவித்துள்ளன.

கடந்த சில நாட்களாக ஏராளமான இந்திய விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version