இலங்கை

அரச இல்லங்களை தொடர்ந்தும் ஆக்கிரமிக்கும் முன்னாள் அமைச்சர்கள்

Published

on

முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லை என இலங்கையின் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதனையடுத்து இந்த முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை விடுத்துள்ள அமைச்சு, இந்த மாதம் 30ஆம் திகதிக்குள் இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

 

அத்துடன், மீள ஒப்படைக்கும் முன்னர், தண்ணீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டுக் கட்டணங்களையும் செலுத்துமாறும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உத்தியோகபூர்வ இல்லங்களின் கட்டணங்கள் அனைத்தும் முறையாக செலுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவை திரும்ப ஏற்றுக்கொள்ளப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version