இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள்: வெளிநாட்டவர்களுக்கும் தொடர்பு

Published

on

இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள்: வெளிநாட்டவர்களுக்கும் தொடர்பு

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் கணிசமான அளவுக்கு இணையவழி மோசடிகள் அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் நிலைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கையில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் 8000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த குழு அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் மாத்திரம் முன்னூறுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணனி அவசர தயார் நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதே போன்று கடந்த காலங்களில் முகப்புத்தக மோசடிகள் தொடர்பிலும் பெருமளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இலங்கையில் இணைய வழி மோசடிகளை அரங்கேற்றிய குற்றச்சாட்டில் இதுவரை 200க்கும் ​மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெருமளவான இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version